எழிலரசியின் கவிதைகளில் மனத்தின் கனம் அனைத்தும் கவிதைச் சிறகசைப்பில் மென்மையாய்ச் சொல்லப்படுகின்றது. தன்னிச்சையாய்ச் சீழ்க்கை அடித்துப்பாடும் ஒரு பறவையின் ஏகாந்தத்தைக் கொண்டுள்ளன அவரது கவிதைகள். மிகையும் இறுக்கமும் அற்ற எளிய படிமங்களால் நீரோடை போன்ற அமைதியான வாக்கியங்களை வடிக்கிறார் எழிலரசி. வழமையான பெண் உலகில் வழியும் சிறிய சந்தோஷங்கள், சிக்கல்கள், நெருடல்கள் இவையே இவரது கவிதை உலகம். இவை விரிந்து பல தளங்களில் தடம்பதிக்கக் கூடிய சாத்தியங்கள் எழிலரசியின் கவிதைகளில் இருக்கின்றன.- கனிமொழி
View cart “சுகிர்தராணி கவிதைகள்” has been added to your cart.
Be the first to review “மிதக்கும் மகரந்தம்” Cancel reply
Reviews
There are no reviews yet.