தமிழில் மகத்தான நாவல்கள் என்று சொல்லப்படுபவை பலவும் உண்மையிலேயே சாத்தியமுள்ள உயரத்தில் பறக்காமல் பாதுகாப்பான உயரத்தில் பறந்துகொண்டிருப்பவை என்றே தோன்றுகிறது. கீழே விழுந்தாலும் கவலையில்லை என்று முயன்று பார்த்த நாவல்கள் வெகு குறைவு. அப்படிப்பட்ட நாவல்களின் மிகச் சிறிய பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது பா. வெங்கடேசனின் சமீபத்திய நாவலான ‘பாகீரதியின் மதியம்’.
இந்த நாவல் பல்வேறு காலப் பகுதிகளை உள்ளடக்கினாலும் பிரதானக் கதை நிகழ்வது சுதந்திர இந்திய வரலாற்றின் மிகக் கொந்தளிப்பான காலகட்டமான நெருக்கடி நிலையை ஒட்டிய ஆண்டுகளில். இந்தியாவின், தமிழகத்தின் முக்கியமான சரித்திர நிகழ்வுகளுள் சிலவற்றையும் கதைப் போக்கில் நாவல் தொட்டுச் செல்கிறது. பெரியார், காந்தி, சாரு மஜூம்தார் ஆகியோரின் பிரசன்னம் கணிசமான இடங்களில் இருக்கிறது.
ஒரே நேரத்தில் ‘பாகீரதியின் மதியம்’ தமிழின் மிகச் சிறந்த காதல் நாவல்களுள் ஒன்றாகவும் மிகச் சிறந்த அரசியல் நாவல்களில் ஒன்றாகவும் உருவாகியிருப்பது பெரும் சாதனை. நாவலின் பிற்பகுதியில் சுற்றுச்சூழல் சார்ந்த ஒரு பிரக்ஞை, படைப்பூக்கத்துடனும் வெளிப்பட்டிருக்கிறது. ஓவியக் கலை இந்த நாவலின் அடிப்படைகளுள்ஒன்று.
நன்றி: இந்து தமிழ் திசை
Reviews
There are no reviews yet.