ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் கல்வியாளர்களையே சென்று சேரும். இவை பொது நிலையினரைக் குறிப்பாக அந்த வளங்களை பயன்படுத்துவோரைச் சென்று சேருவதில்லை. இவை, அவர்களைச் சென்று சேர வேண்டுமென்றால் அவர்களுக்கு தெரிந்த மொழியில், அவர்களுக்கு புரியும் விதத்தில் கட்டுரைகளாகவோ அல்லது புத்தகங்களாகவோ வெளியிட வேண்டும்.
அவ்வாறு வெளியிட்டால் அவை அவர்களைச் சென்று நல்லமுறையில் சேரும், நல்ல பலன்களைத் தரும். இந்த அடிப்படையில் 81 கட்டுரைகளாகவும், (இதில் 4 மட்டும் கடல்சாரா உயிரினங்கள் பற்றியவை) “அறிவியல் விந்தைகள்” என்ற தலைப்பில் வெளிவந்த ஆதாரங்கள் தான் இந்நூலாக தற்போது உருப்பெற்றுள்ளது.
Reviews
There are no reviews yet.