கோபிகிருஷ்ணன், தன் படைப்புகளில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். தன் அற்புத கணத்தை, ஆசா பாசத்தை, அவமானத்தை, வாழ்க்கை கொண்டுவந்து சேர்த்த கடைசிப் படியை எந்த தன்னிரக்கமும் இன்றி, ஒரு மூன்றாம் மனிதனின் கதையைச் சொல்வதைப் போல தள்ளி நின்று எழுதிக்கொண்டு போனார். அந்தரங்கம் என்ற ஒன்று தனக்கானது என்றுகூட அவர் விலக்கி வைக்கவில்லை. விருப்புக்கும் வெறுப்புக்கும் அப்பால் தன் மனதை இருத்தி வைத்துக்கொண்டு எழுதினார். ஆங்கிலத்தில் நிறை புலமையும் தொழில் திறமைகளும் நிறைந்த அவர் அவற்றைக்கொண்டு அடிப்படைத் தேவைகளையும்கூட பூர்த்திசெய்துகொள்ள முடியவில்லை. எழுத்தைத் தன் விருப்பம் தாண்டி, அந்த அலாவுதீன் பூதத்திடம் அற்புத விளக்கு ஒன்று இருப்பதை அவர் அறியார். அறிந்திருந்தால் அந்த விளக்கில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்திருப்பார். அந்த விளக்கின் அற்புதப் பயன்பாட்டை அவர் லட்சியம் செய்திருக்க மாட்டார்.
கோபிகிருஷ்ணன் படைப்புகள்
Brand :
- Year: 2012
- ISBN: 9789382648208
- Page: 1024
Be the first to review “கோபிகிருஷ்ணன் படைப்புகள்” Cancel reply
Reviews
There are no reviews yet.