தோழர் ஹேமா அவர்களின் இந்தப் பத்துக்கதைகளும் புத்துணர்ச்சி தரும் கதைகள். தன் சுயத்துக்காக, சுய அடையாளத்துக்காகப் போராடும் பெண்களே இக்கதைகளின் பிரதான கதாபாத்திரங்கள். அவர்கள் எந்தப் பொருளாதாரப் பிரிவிலிருந்து வந்திருந்தாலும்,எந்தக் கலாச்சாரப் பின்னணியிலிருந்து வந்திருந்தாலும் போராட்டம்தான் அவர்களின் சுயத்தை மீட்க ஒரே வழியாக இருக்கிறது.
சுய இரக்கத்துடன் கண்ணீர் வடிக்கும் பெண்களாக அல்லாமல், சூழல் கொடுக்கும் நெருக்கடிகளுக்கு நடுவே இவர்கள் அவரவர் வழியில் கம்பீரமாக எழுந்து நின்று சுடர் விட்டுப் பிரகாசிக்கிறார்கள். சுண்டல் விற்கிற சிறுமியிலிருந்து கல்லூரிப் பேராசிரியர் வரை, தங்கள் வாழ்வின் அர்த்தம் தேடிப் பயணிக்கும் இப்பெண்கள் வாசக மனதில் பெருமூச்சையும் நம்பிக்கையையும் ஒரே நேரத்தில் உருவாக்குகிறார்கள். அடித்தட்டு மக்களின் மீது தோழர் ஹேமா கொள்ளும் பரிவும் நேசமும் அக்கறையும் ஒவ்வொரு கதையின் வண்ணமாகவும் வாசமாகவும் அமைந்து நம் மனங்களை நிறைக்கின்றன..பாரதிக்கு எழுதிய கடிதமும் செப்டம்பர் தினங்கள் பற்றிய கட்டுரையும் ஒரு கவிதையும் கூடுதல் பரிசாக நம் கைவந்து சேர்கின்றன.
Reviews
There are no reviews yet.