தோழர் லார்க் பாஸ்கரனின் கவிதைகளில் ஒரு மிதமான கவிதைக் கற்பனையே அதிகம் வெளிப்பட்டு நிற்கின்றன. கவிதைச் சம்பவங்களும் குறைந்தளவே தென்படுகிறது. ஆயினும், அவரின் கவிதைச் சம்பவங்களை இணைத்து கதைக் கவிதையாக மாற்றும் போது, மனதிற்குள் ஒரு திரையிடல் நடந்தேறுகிறது. இந்த வகைப்போக்கையே இன்னும் ஆழமாக வளர்த்தெடுத்தால், தனக்கான தனித்து ஒரு கவிதை சொல்லலை நோக்கி நகரலாம் என நினைக்கிறேன். தனியான கவிதை சொல்லலை நோக்கி நகருவது அத்தனை இலகுவானதல்ல. தமிழ் கவிஞர்களில் எவரும் தனித்த போக்கை கொண்டவர்களல்ல. அது சாத்தியமும் இல்லை. எனினும், தனித்தன்மை நிரம்பியதாக உணரச் செய்யும் கவிதைப் பிரதிகளை கண்டடையலாம் என நினைக்கிறேன்.
~ரியாஸ் குரானா
Reviews
There are no reviews yet.