எண்ணென்ப ஏனைஎழுத்தென்ப இவ்விரெண்டும் கண்ணென்ப வாழும்உயிர்க்குஎன்கிறார் வள்ளுவர்நான் ஒற்றைக் கண்ணன்.எண்களென்றாலேஎனக்குப் பிடிக்காது.ஆனால் விதிஎண்ணப் பிடிக்காதவனைஎண்ணுவதையேபிழைப்பாக்கிவிட்டது.‘ஒன்றை இரண்டாகப் பிரித்ததேஇரண்டும் ஒன்றாவதற்குத்தான்’இப்படி நான் எழுதியிருக்கிறேன்.அதை அப்படியே பிருந்தா சாரதிஎண்ணியிருக்கிறார்.வியப்பேதுமில்லை.ஒரே பாதையில் நடப்பவர்கள்அதே காட்சிகளையே பார்ப்பார்கள்.நான் நடக்கும் பாதையிலேயேபிருந்தா நடக்கத் தொடங்கியிருக்கிறார்.ஒளியை அடைவார்.முதலில் பூஜ்யம்தான் இருந்தது.அது முட்டையாகவும்கோழியாகவும் இருந்ததுபூஜ்ஜியத்திலிருந்துதான் ஒன்று வெளிப்பட்டது.அந்த ஒன்றிலிருந்தேமற்ற எண்கள் பிறந்தன.இது கூட்டலாகவும்பெருக்கலாகவும் நடந்தது.இறுதியில் எல்லாம்ஒன்றில் ஒன்றும்.அந்த ஒன்று பூஜ்ஜியத்தில் ஒடுங்கும்.ஆதியும் பூஜ்ஜியம் அந்தமும் பூஜ்ஜியம்அதுதான் முப்பாழ்அதுதான் மோட்சம்அதுதான் நிர்வாணம்அதுதான் வீடுபேறுநாமும் பூஜ்ஜியத்திலிருந்துதான் வந்தோம்இறுதியில்பூஜ்ஜியத்திற்குள்தான் மறைவோம்.எங்களை விட மதிப்புடையதுபூஜ்ஜியம்தான்.அதன் இடம் விசாலமானது.எல்லையற்றது.இறைவன் அங்கேதான் இருக்கிறான்.இறைவன் பூஜ்ஜியத்துக்குள் இருக்கிறான்என்பது கூடத் தவறு.அவன் பூஜ்ஜியமாகவேஇருக்கிறான்.எல்லா எண்களையும்உள்ளடக்கிய பூஜ்ஜியமாக.இந்த தத்துவத்தின் சாரத்தை'கூட்டிக் கழித்து வாழ்பூஜ்ஜியம் என்று புரிந்துகொண்டு போ.'என்ற வரிகளில் பிழிந்து தந்துவிடுகிறார்பிருந்தா.உண்மையில் எல்லாக் கணக்குகளின் விடையும் பூஜ்ஜியமே.தேர்வில் பூஜ்ஜியம் வாங்குகிறவன் தோற்கிறான்.ஆனால் வாழ்கையில் பூஜ்ஜியம் வாங்குகிறவன் ஞானியாகிறான்.பிருந்தா சாரதி எண்களைப் பற்றியே எண்ணி எழுத்தாக்கியிருக்கிறார்.எண்ணையே எழுத்தாக்கியிருக்கிறார்.அவருக்கு மதிப்பெண்ணாக நான்பூஜ்ஜியத்தை வழங்குகிறேன்.பிருந்தாவின் கவிதைகள் பிருந்தாவனமாய் விரிகின்றன.அங்கே அவர் கண்ணனாகிக் குழலூதுகிறார்.எண்களெல்லாம் கோபியர்களாகிஅவரைச் சுற்றி ஆடுகின்றன.*பிருந்தா திரைப்பட உலகத்திலிருக்கிறார்அதனால் எனக்குக் கொஞ்சம் அச்சமாக இருக்கிறது;எங்கே அவர் புல்லாங்குழல் அடுப்பூதும் குழலாக மாறிவிடுமோஎன்று.அவர் தன்னையும், தன் புல்லங்குழலையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.ஏனென்றால் அந்தப் புல்லாங் குழலில் அமர கீதங்கள் பலகர்ப்பத்தில் இருக்கின்றன.அப்துல் ரகுமான்4.1.2017
- Edition: 01
- Published On: -
- ISBN: -
- Pages: -
- Format: Paperback