கடல் பழங்குடிகள் முன்னெப்போதும் சந்தித்திராத நடுக்கத்தை ஒக்கிப் பேரிடரின்போது எதிர்கொண்டன.இப்பீதி கடல் விளைவித்ததல்ல, கரை திட்டமிட்டு நிகழ்த்திய ஓன்று. அபாயமணி ஒலிக்கவேண்டிய அரசு அவர்களைக் கைவிட்டது; மீட்க வரவேண்டிய படைகள் அவர்களின் சடலங்களை சேகரிக்கக்கூட வரவில்லை… இயற்கைப் பேரிடர்களை அடித்தள மக்கள் மீதான உளவியல் போராக முன்னெடுக்கும் குரூர மனநிலை ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்டுவிட்டால் அம்மக்களுக்குப் போக்கிடமேது? முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் (1959, பள்ளம்துறை) தூத்தூர் செயின்ட் ஜூட்ஸ் கல்லூரியில் 1982 முதல் மீன்வளமும் விலங்கியலும் கற்பித்து 2018இல் பணிநிறைவு பெற்றவர். 1990களில் தொடங்கி கடல், மீன்வளம், கடல்சார் மக்கள் குறித்து ஆய்விலும் எழுத்திலும் தொடர்ந்து தீவிரமாய் இயங்கி வருகிறார். ‘கடலம்மா பேசுறங் கண்ணு’, ‘நெய்தல் சுவடுகள்’, ‘பழவேற்காடு முதல் நீரோடி வரை’, ‘மூதாய் மரம்’, ‘The Sea Tribes under Seige’ உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நூல்களையும் ஓர் ஆவணப் படத்தையும் படைத்துள்ளார். நெய்தல் வெளி, கடல்வெளி பதிப்பகங்களின் நிறுவன பதிப்பாளராக ஏராளம் படைப்பாளிகளைத் தமிழுக்கு அறிமுகப் படுத்தியுள்ளார். விகடன் இலக்கிய விருது(2015), அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு (2016), மம்மா ஆதா விருது (2016) முதலிய பல விருதுகள் பெற்றுள்ளார்.
View cart “எனதருமை டால்ஸ்டாய்” has been added to your cart.
கடற்கோள் காலம்
Brand :
- Edition: 01
- Published On: 2019
- ISBN: –
- Pages: 128
- Format: Paperback
Category: கட்டுரைகள்
Author:வறீதையா கான்ஸ்தந்தின்
Be the first to review “கடற்கோள் காலம்” Cancel reply
Reviews
There are no reviews yet.