முன்னோடிகள், முன் தலைமுறையினர், சமகாலத்தவர் ஆகிய வெவ்வேறு காலத்தைச் சேர்ந்த இலக்கிய ஆளுமைகளைப் பற்றி வண்ணநிலவன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.
‘பொதுவாகவே எந்த எழுத்துக் கலைஞனது படைப்புகளிலும் அவனது அகவுலகம் விரிந்து கிடக்கிறது’ என்று வண்ணநிலவன் நம்புகிறார். இலக்கியத்தையும் இலக்கியவாதிகளையும் பிரித்துப் பார்ப்பதில்லை. படைப்பின் நிறைகுறைகளைச் சுட்டிக் காட்டுகிறார். அதே இயல்பில் படைப்பாளிகளைக் குறித்தும் பேசுகிறார். முடிவானவையாக இல்லாமல் அபிப்பிராயங்களாகவே பகிர்ந்துகொள்கிறார். நீண்ட காலப் படைப்பனுபவமும் இலக்கியப் பட்டறிவும் வண்ணநிலவனின் கருத்துகளைப் பொருட்படுத்திச் சிந்திக்க வாசகரைத் தூண்டுகின்றன.
Reviews
There are no reviews yet.