ஒரு மாநகரத்தின் வளர்ச்சி என்பது அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதாகும். அவர்களின் அடிப்படை தேவைகள், வசதிகள் பூர்த்தி செய்யப்படுவதாகும். அப்படி சென்னைவாசிகளின் அடிப்படை தேவைகள், வசதிகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்று ‘‘சென்னையின் மறுபக்கம் – நிஜங்களின் தரிசனம்’’ என்ற இந்த புத்தகத்தில் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.
குடியிருப்பு, சாலை, சுகாதாரம், மருத்துவம், வாழ்வாதாரம், தனியார் மய பிரச்னைகள் என்று சென்னை நகரவாசிகளின் பல்வேறு பிரச்னைகள் இந்த புத்தகத்தில் அலசி ஆராயப்பட்டிருக்கிறது. அதோடு பிரச்னைகளுக்கான தீர்வும் சொல்லப்பட்டிருக்கிறது.