சமகாலத்தில் ஒலிக்கும் நவீனப் பெண்ணியக் குரலாகக் கலைமதி இத்தொகுப்பில் தன்னை அழுத்தமாக அடையாளப்படுத்தியிருக்கிறார். வாழ்வில் கடக்கும் பல்வேறு அனுபவங்கள் – பார்வைகள் இத்தொகுப்பில் கவிதையாக்கம் பெற்றுள்ளன. எழுத்து-சொல் – பொருள் – உணர்வு – கருத்தியல் கொண்ட கவிஞர் இவர் என்பதற்கு இக்கவிதைகள் சாட்சியாகத் திகழ்கின்றன. இத்தொகுப்பு கலைமதியை கவிதை தளத்தில் அடையாளப்படுத்தும் என்று கருதுகிறேன். வாசிப்பவர் மனதில் சிறுபொறியை தெறிக்கவிடும் என்று நம்புகிறேன்.- கவிப்பேரரசு வைரமுத்துபால்யகாலத்தின் மீதான பிரம்மைகளால் உந்தப்பட்டவராக பல கவிதைகளில் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். நிறமி கவிதைகளின் குரல், உலகத்திற்கு புதிய குரல் என்றாலும் , அது புதியதொரு குரல் மாதிரி இல்லாமல் இருப்பதுதான் வியப்பு. கவிதையின் வெற்றிக்கு கவிதை குறித்த பிரக்ஞை அவசியம் என்று சொல்வார்கள். அந்த பிரக்ஞை தான் இக்கவிதைகளின் முழுமைக்கு காரணமாக இருக்கிறது.- கவிஞர் சல்மா
நிறமி (டிஸ்கவரி புக் பேலஸ்)
Brand :
- Edition: 01
- Published On: –
- ISBN: –
- Pages: –
- Format: Paperback
Category: கவிதைகள்
Author:கலைமதி ஆனந்த்
Be the first to review “நிறமி (டிஸ்கவரி புக் பேலஸ்)” Cancel reply
Reviews
There are no reviews yet.