(தேவதேவன் கவிதைகள்: இதுவரை அச்சில் வராத கவிதைகளின் இரு பெருந்தொகுப்புகள்)
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தன்னுடைய மனதுக்கு மிக அணுக்கமானவராகவும், ஆசிரியராகவும் போற்றிக் கருதுகிற கவிஞர் தேவதேவனைப் பற்றி குறிப்பிடும் பெருந்திரள் சொற்பெருக்கின் ஒருசில வரிகள் இவை. சமகாலத்தில் தமிழ் கவிதையுலகில் நிகழ்ந்த உச்சபட்ச சாத்தியங்களில் ஒன்றென நாம் தேவதேவனை அறிவித்து வியப்பதில் சிற்றளவும் தயக்கமில்லை. ‘மொழி தனது சாத்தியங்களை அடுத்தகட்டத்திற்கு அதிகரித்துக்கொள்ள துணைநிற்பதே கவிஞனின் இறுதி இலக்காக இருக்க முடியும்’ என்ற ஆற்றூர் ரவிவர்மாவின் வரிகளுக்கு முழுக்க முழுக்க நேர்மை செய்கின்றன தேவதேவன் அவர்களின் கவியுலகு. எல்லா துயர்களுக்கு நடுவிலும் கருணையையும் அறத்தையும் தேடித்துழாவி கண்டைந்து மலர்த்துகிற ஓர் தூய பாணன் போல தேவதேவன் நம்மோடு தனித்துலவுகிறார்.
Reviews
There are no reviews yet.