மூர்த்தியின் கதைக்களம் பொதுவாக நமது கவனத்திற்குள் வந்துவிடாதவை. கல்லுக்காடு (கல் உடைக்கும் இடம்), கல் அரைக்கும் கிரஷர், பன்றிகள் உலும்பித் திரியும் புதர்கள், மேய்ச்சல் நிலம், குன்றுக்கும் சமதளத்துக்கும் இடைப்பட்ட ஓடை சலவைத்துறை மனிதர்களை காவுகொள்ளும் மலக்குழி பூப்படைந்த மற்றும் மாதவிலக்கான பெண்கள் ஊருக்கு வெளியே ஒதுக்கிவைக்கப்படும் தீட்டறை, நாட்டார் தெய்வங்களின் கோயில்கள் காட்டுக்கோயில்கள் என அவை காட்டும் நிலக்காட்சிகள், ‘பச்சைப்பசேல்’ என காட்டப்பட்டுவரும் சிற்றூர் தோற்றங்களுக்குப் பொருந்தாதவை. இவரது கதைமாந்தர்கள் வெகு சாமானியர்கள். தனிப்பட்ட முறையில் பேராற்றல் கொண்டிருப்பினும் ஆணுக்கு பணிந்திடும் பெண், முதலாளிக்குப் பணிந்திடும் தொழிலாளி, ஆதிக்க சாதியின் அட்டூழியங்களை சகித்துக்கொள்ளும் அடிநிலைச் சாதியினர், தெய்வக் கற்பிதங்களுக்கு தாள் பணியும் மனிதர்கள் என இவர்கள் ஒருபுள்ளியில் இணைகிறார்கள். நிலம், தொழில், பொருளாதாரம் மற்றும் சாதி சார்ந்து சிற்றூர்களின் மனிதர்கள் தமக்குள் பேணும் உறவுகளில் நிலவும் படிநிலைகளையும் தீண்டாமைகளையும் அவற்றினால் உண்டாகும் துயர்களையும் மீறல்களையும் சொல்வதற்கு இக்கதைகள் மூர்த்திக்கு தேவைப்பட்டுள்ளன. ஆதவன் தீட்சண்யா – தமுஎகச
கள்ளிமடையான்
Brand :
₹140
- Edition: 01
- Published On: 2023
- ISBN: 9789392578281
- Pages: 142
- Format: Paper Cover
SKU: 9789392578281
Category: சிறுகதைகள்
Author:க. மூர்த்தி
Be the first to review “கள்ளிமடையான்” Cancel reply
₹140
Reviews
There are no reviews yet.