ஸ்பாரோவின் சார்பாக பதிப்பாசிரியர் சி.எஸ்.லக்ஷ்மி
(Free shipping for orders above ₹500 within India)
வரலாற்றாசிரியர்; புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பெண்கள் வரலாறு, வாழ்க்கை குறித்த ஆய்வில் ஈடுபட்டிருப்பவர். 1988-இல் மும்பையில் நிறுவப்பட்ட இந்த ஆவணக் காப்பகத்தின் தற்போதைய இயக்குநர்.
**
சகோதரி R.S. சுபலக்ஷ்மி அம்மாள் (1886-1969) குடும்பமும் சமூகமும் புறக்கணித்த பல இளம் விதவைகளுக்குக் கல்வி புகட்டியவர்; சமூகச் சீர்திருத்தவாதி. மரபு வழுவாத குடும்பத்தில் 1886-இல் பிறந்து சிறுமியாக இருக்கும்போதே விதவையானார். அவர் குடும்பம் வைதிக மரபுகளை எதிர்த்து அவரைப் படிக்க வைத்தது. எல்லாச் சமூக இடர்களையும் எதிர்கொண்டு, தன் குடும்பம் பக்கபலமாக இருக்க, கல்வி கற்றதோடு நிற்காமல், ஆசிரியராகவும் இருந்து, பெண்களுக்கான விதவாச்ரமம் அமைத்து, சமூக சேவை செய்ய அங்கு ஆசிரியர்களையும் டாக்டர்களையும் அரசு ஊழியர்களையும் உருவாக்கினார் சகோதரி சுபலக்ஷ்மி. அதோடு நிற்காமல் சாரதா வித்யாலயம், வித்யா மந்திர் போன்ற பல பள்ளிகளையும் நிறுவினார். அடிமட்டத்தில் இருக்கும் குழந்தைகளுக்கும் பள்ளிகளை நிறுவினார். அகில இந்திய மகளிர் மாநாடு, இந்திய மாதர் சங்கம் போன்ற அமைப்புகளில் தீவிரமாகச் செயல்பட்ட, 1952-1956 ஆண்டுகளில் மதராஸ் மாகாணத்தின் சட்ட மேலவை உறுப்பினராக இருந்த, 1920-இல் கைசர்-இ-ஹிந்த் பதக்கமும் 1958-இல் பத்ம ஸ்ரீ விருதும் பெற்ற அபூர்வமான ஒரு மனுஷி, பலரின் வாழ்க்கைச் சரிதங்களை இணைச் சரிதங்களாகக் கொண்டு கூறும் வாழ்க்கைச் சரிதம் இது.
இந்தக் கதைகளையும் சகோதரியின் வாழ்க்கை அனுபவங்களையும் படிக்கும்போது ஒரு மாபெரும் காப்பிய நாடகம் கண்முன் நடப்பதுபோன்ற உணர்வைத் தடுக்க முடியாது. பாலிய வயதில் விதவையாகி, பெண்கள் கௌரவத்துடன் வாழும் சமூகமாகத் தன் சமூகத்தையும் சமுதாயத்தையும் சீர்திருத்தும் முயற்சிகளை மேற்கொண்ட அரிய பெண்மணி ஒருவரின் சுயசரிதமாகக் குறுகி விடாமல் பெண்களின் சமூக வரலாறாக விரியும் நூல் இது. கடந்தவற்றைத் திரும்பிப் பார்க்க உதவும் ஒரு வரைபடமாக இருப்பதுடன் பின்னோக்கிப் பார்க்காமல் முன்னோக்கிப் போக முடியாது என்பதால், இன்றைய தறுவாயிலும் இந்தச் சுயசரிதை பொருந்திப்போகிறது.
**
சகோதரி R.S. சுபலக்ஷ்மி அம்மாள் (1886 - 1969)
கல்வி கல்வியாளர்; சமூகச் சீர்திருத்தவாதி. மரபு வழுவாத குடும்பத்தில் 1886இல் பிறந்து, சிறுமியாக இருக்கும்போதே விதவையானார் அவர் குடும்பம் வைதிக மரபுகளை எதிர்த்து அவரைப் படிக்க வைத்தது. 1911-இல் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்று முதல் வகுப்பில் சிறப்புப் பட்டத்துடன் தேறிய முதல் இந்துப் பெண் ஆனார். 1912-இல் சாரதா பெண்கள் ஐக்கியச் சங்கத்திடமிருந்து பெற்ற முதல் நன்கொடையான ரூ.2000/-த்துடன் அப்போது பள்ளி ஆய்வாளராக இருந்த க்ரிஸ்டீனா லிஞ்ச் (திருமணத்துக்குப் பிறகு மிஸஸ். ட்ரைஸ்டேல் என்று அழைக்கப்பட்டார்) என்பவருடன் இணைந்து பிற்காலத்தில் விதவாசிரமம் என்று அழைக்கப்பட்ட சாரதா ஆசிரமம் அல்லது சாரதா இல்லம் அமைப்பை எக்மோரில் அவர் வாழ்ந்து வந்த அரச மரத்து வீட்டிலேயே ஆரம்பித்தார். தன் பெயருக்கு முன் சகோதரி என்ற அடைமொழியைச் சேர்த்துக்கொண்டதும் அந்தச் சமயத்தில்தான். அதன்பின் இல்லம் பல இடங்களுக்கு மாறி, பிறகு இப்போது விவேகானந்தர் இல்லம் என்று இப்போது அழைக்கப்படும் ஐஸ் ஹவுஸுக்குக் குடியேறியது. சகோதரி சுபலக்ஷ்மி பல பள்ளிகளில் ஆசிரியராக வேலை பார்த்தார். சாரதா வித்யாலயம், வித்யா மந்திர் போன்ற பல பள்ளிகளையும் நிறுவினார். அடிமட்டத்தில் இருக்கும் குழந்தைகளுக்கும் பள்ளிகளை நிறுவினார். அகில இந்திய மகளிர் மாநாடு, இந்திய மாதர் சங்கம் போன்ற அமைப்புகளில் தீவிரமாகச் செயல்பட்டார். 1952-1956 ஆண்டுகளில் மதராஸ் மாகாணத்தின் சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார். 1920-இல் கைசர்-இ-ஹிந்த் பதக்கம் பெற்றார். 1958-இல் பத்ம ஸ்ரீ விருதளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்களை எழுதியிருக்கிறார். எளிய உரையுடன் அவர் எழுதிய பகவத் கீதை எல்லோரும் அறிந்த நூல். சகோதரி சுபலக்ஷ்மி 20 டிசம்பர், 1969-இல் இவ்வுலகை நீத்தார்.
**
Buy Now
(Free shipping for orders above ₹500 within India)
₹380 ₹400 (5% Off)
Estimated delivery time
Books/ Articles will be shipped within 3-7 working days.
We accept All Payment Methods
With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.
No Return Policy
Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.
Related Books
By continuing, you agree to our Terms of Use and Privacy Policy