சுஜாதா (மே 3, 1935 – பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடை
சுஜாதா (மே 3, 1935 – பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் ~நன்றி: விக்கிப்பீடியா எழுத்தாளர் சுஜாதா புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். அவர் ஒரு பொறியியல் வல்லுநர். அறிவியலைத் தமிழ் இலக்கியத்தில் இடம் பெறச் செய்தது அவரின் முக்கியமான பங்களிப்பாகும். அவரின் எழுத்துக்கள் அனைவரும் படித்து புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் உள்ளன. எழுத்தாளர் சுஜாதா அவர்களின் இயற்பெயர் ரங்கராஜன். அவர் தன் மனைவியின் பெயரான “சுஜாதா” என்னும் புனைப்பெயரில் தன் படைப்புகளை எழுதி வந்தார். ~நன்றி: www.inidhu.com
Read More
Read Less
By continuing, you agree to our Terms of Use and Privacy Policy