தமிழில் தியடோர் பாஸ்கரன் அவர்களின் இடம் இருவகையில் முன்னோடித் தகுதி கொண்டது. தமிழ் திரைப்படத்தை வெறுமே அரட்டைத் தகவல்களின் தொகையாக அல்லாமல் சமூகவியல்,
தமிழில் தியடோர் பாஸ்கரன் அவர்களின் இடம் இருவகையில் முன்னோடித் தகுதி கொண்டது. தமிழ் திரைப்படத்தை வெறுமே அரட்டைத் தகவல்களின் தொகையாக அல்லாமல் சமூகவியல், அரசியல் நோக்குடன் வரலாறாக எழுத ஆரம்பித்தவர் அவர். அதற்காக சினிமாக்கலைச்சொற்களுக்கு தமிழ்ச்சொற்களை உருவாக்கினார். எளிமையும் நேரடித்தன்மையும் கொண்ட மொழியை அமைத்தார். சினிமா என்ற கலைவடிவம் பண்பாட்டாய்வுக்கான பெரும் களம் என்பதை நிறுவினார் ஆனால் சூழியலாளராகவே அவர் முதன்மைப்படுகிறார். தமிழில் சூழியல் எழுதப்பட ஆரம்பித்த காலகட்டத்தில் தியடோர் பாஸ்கரன் எழுதவந்துவிட்டார். சூழியல்எழுத்து என்பது வெறுமே சூழியலழிவுகளைப்பற்றிய அறிவுறுத்தல்களோ பிரச்சாரமோ அல்ல என்பதை நிறுவியவை அவரது எழுத்துக்கள். இயற்கையைப்பற்றிய கவித்துவம் கொண்ட விவரணைகள் வழியாக ஒரு தலைமுறையையே சூழியல் நோக்கி கொண்டுவந்தார் என்றால் அது மிகையல்ல. சூழியல் தளத்தில் நாம் இன்று கையாளும் பல கலைச்சொற்கள் அவரால் உருவாக்கப்பட்டவை – சூழியல் என்பது உட்பட. பறவைகள் ,மிருகங்கள், இயற்கை நிகழ்வுகளுக்கு அவர்றுக்குரிய கலைச்சொற்களை உருவாக்கியாகவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஒரு சிந்தனை அதற்கான மொழி இல்லையேல் ஒருபோதும் நீடிக்காது என்பதே அவரது தரப்பு. நன்றி: ஜெயமோகன்
Read More
Read Less
By continuing, you agree to our Terms of Use and Privacy Policy