இதுதான் அனைத்தும் என நினைக்கும் ஒன்றை ஒருவர் இழந்துவிட்டால், அவருடைய நிலை என்ன? அவருடைய மனநிலை என்னவாக இருக்கும்? அவளுடைய சமூக நிலையை, பொருளாதாரத்தை, அடையாளத்தை, மொத்தத்தில் வாழ்க்கையையே தீர்மானிப்பதாக இருந்தது அவளுடைய குரல். திரைத்துறையில் பல கதாநாயகிகளின் வெற்றிக்குத் துணை நின்ற தன்னுடைய குரலை, பின்னணிக் குரல் கொடுக்கும் ஒரு பெண் இழந்துவிட்ட சூழ்நிலை. இப்போது அவளுடைய மௌனத்திற்குக் குரல் கொடுக்க யார் இருக்கிறார்கள்? தன்னுடைய அழுகைக்கும் ஒலியெழுப்ப யாருமற்ற சூழலில் அவள் கடந்த வந்த இரண்டு ஆண்டுகள் வழியாக நகரும் கதை. கேரள சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் ணி.சந்தோஷ்குமார் மலையாளத்தில் எழுதிய ‘வாக்குகள்’ நாவல், சிதம்பரம் இரவிச்சந்திரனால் ‘வார்த்தைகள்’ என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
வார்த்தைகள் (நாவல்)
Brand :
- Edition: 01
- Published On: 2023
- ISBN: 9788196456610
- Pages: 100
- Format: Paper Cover
Be the first to review “வார்த்தைகள் (நாவல்)” Cancel reply
Reviews
There are no reviews yet.