தொன்மத்தின் எச்சமான புராணப் பாத்திரங்களான பரஸ், ரேணு வழியாக பல்வேறு காலகட்டங்களில் சில படிநிலைகளில் அவர்களின் மன உலகையும் பெளதீக உலகையும் பிணைக்குமொரு மெல்லிய சரடை வர்ணனைகளிலும் உரையாடல்களிலும் செறிவான மொழியில் தம் முதல் படைப்பிலேயே வெளிக்கொணர்ந்திருக்கிறார் ஆசிரியர்.
நாவலில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ரேணுகா என்ற பாத்திரம் இந்திய நிலமெங்கும் அலைவுற்று சில கேள்விகளோடு பொருந்திப் போகும் ரேணுகாதேவியின் வழிபாட்டு முறைகளைக் குறித்தும் அதன் மீதான வாழ்வு முறை குறித்த கேள்வியையும் நாவல் ஒரு புதிய கோணத்தில் விளக்க முனைகிறது.
Reviews
There are no reviews yet.