பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அதிகாரத்திற்குப் பணியாத சுதேச அரசுகளை மரபான போர்களின் மூலம் வென்றடக்கிய பிறகு அதில் தப்பிய இனக்குழு மற்றும் பழங்குடியாட்சி குடிகளையும் அலைகுடிகளையும் ஒடுக்கக் கண்டுபிடிக்கப்பட்ட சட்ட வடிவிலான போர்தான் குற்றப்பரம்பரைச் சட்டம். இதுவரை பொதுவெளியில் விவாதிக்கப்படாத இச்சட்டத்தின் கொடூர முகத்தை முதன் முதலாக உசிலம்பட்டி சாமிகருப்பத்தேவன், உத்திரபிரதேசத்து பிஹாரி பார். மும்பையின் மகன்பிஹா உள்ளிட்ட இன்னபிற குற்றப் பழங்குடிகளின் மீது பிரிட்டிஷார் தொடுத்த நீதிமன்ற வழக்கு ஆவணங்களின் வழி அம்பலப்படுத்துகிறது இந்நூல். 1949இல் அன்றைய ஆந்திர மாநில நெல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வெ.ராகவைய்யா அவர்கள் இந்தியாவில் குற்றப்பரம்பரைச்சட்டம் அமுல்படுத்தியதின் கொடுமைகளை இத்தொகுப்பில் தெளிவாக விளக்கியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் குற்றப்பழங்குடி மக்களின் தற்கால வாழ்க்கைச் சூழலில் உள்ள நெருக்கடிகளை செயல்பாட்டாளர் மிலிண்ட் பொகில் மானிடவியல் மற்றும் அறிவாதார ஆய்வுகளின் மூலம் விளக்கியுள்ளார். தமிழகத்தில் 1896களிலிருந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மீது குற்றப் பழியைச் சுமத்தி அதில் ஆங்கில அரசு வெற்றி பெற்றதையும் அதனை எதிர்த்து அம்மக்கள் நடத்திய போராட்டத்தையும் ஆய்வாளர் பாலதண்டாயுதம் தனது இரு கட்டுரைகளின் மூலம் விளக்கியுள்ளார்.
Reviews
There are no reviews yet.