இந்தப் புத்தகம் முக்கியத் துவம் பெறுவதற்கான மற்றுமொரு காரணம் மலாய் இலக்கியவாதிகளையும் மட்டும் அ.பாண்டியன் நமக்கு அறிமுகம் செய்துவைக்கவில்லை. மலாய் மொழியில் இலக்கியப் படைத்த இந்தியர்களையும் அறிமுகம் செய்துவைக்கிறார். குறிப்பாகத் திரு.நாகலிங்கம் மலாய் மொழியில் கதைகள் எழுதி பிரசித்திப் பெற்ற தமிழ் படைப்பாளிகளின் முன்னோடியாவார். மேலும், ஜோசப் செல்வம், என்.எஸ்.மணியம், ஆ.நாகப்பன், ஜி.சூசை, பி.பழனியப்பன் ஆகியோர் மலாய் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்தவர்கள். இந்தியர்களின் வாழ்கையை மலாய் மொழியில் பதிவு செய்திருக்கும் இந்த எழுத்தாளர்களைக் குறித்து மலேசிய தமிழர்களே பெரும்பாலும் அறிந்திருக்கவில்லை என்பது வருத்தமான விஷயமாகும்.மலாய் இலக்கியம், மலாய் எழுத்தாளகள் மட்டுமல்லாமல் மலேசிய அரசியல் பார்வை, தேசியம் எனத் தனது தனது பேனாவிருந்து கொஞ்சம் மைகளைச் சிந்த விட்டிருக்கிறார் அ. பாண்டியன்.
அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை
Brand :
- Edition: 01
- Published On: 2015
- ISBN: 9789384915285
- Pages: 72
- Format: Paperback
SKU: 9789384915285
Category: கட்டுரைகள்
Author:அ. பாண்டியன்
Be the first to review “அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை” Cancel reply
Reviews
There are no reviews yet.