இந்நூலில் ஒவ்வொரு பாகமும் இளைய வாசகரை மனத்தில் இருத்தியே எழுதப்பட்டது. அவரது புரிதல் குறைவாகவே இருக்கும், அவருக்கு இதெல்லாம் தெரியாது, நாம் தான் புகட்ட வேண்டும் என்ற பாமரத்தனமான பாணியில் எழுதப்படவில்லை. மாறாக, எதிரே இருப்பது படிப்படியாக படித்து, முன்னேறிவரும் ஒரு மாணவர். அவரது அறிவுத் திறனை அங்கீகரித்து, அதே சமயம், அவரது புரிதலை மேலும் செம்மைப்படுத்தவே இந்தப் பகுதிகள் துணைசெய்யப் போகின்றன என்ற கவனம், இந்நூல் முழுவதும் நன்கு புலப்படும். அதைச் செய்வதற்கு உகந்த மொழியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வி பாடப்புத்தக தயாரிப்பு குழுவில் பணியாற்றிய நாட்களில் பலமுறை நானும் மாதவனும் ஒன்றாக பணியிலும் பேருந்திலுமாக பயணித்து இருக்கிறோம். நல்ல பிடிவாதமான உழைப்பாளி. மாணவர்களான உங்கள் நலம் விரும்பி அவர். புத்தகங்களின் காதலர்.
எளிய அறிவியல் தமிழ் வடிவம் கைவரப்பெற்றவர். ஏறக்குறை ஓராண்டு தினமலர் பட்டம் இதழில் வெளிவந்த வித்தியாசமான மனித உடற்கூறியல் அதிசயம் இன்று உங்கள் கைகளில் தவழ்கிறது. அறுசுவை உணவை நாக்கு எப்படி பிரித்து அறிகிறது? ஐம்புலன்களும் ஒன்றிணைந்து கற்றலை எப்படி நடத்துகிறது? எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்று சொல்லப்படுவது ஏன்? இது போன்ற பல கேள்விகளுக்கான – பதில் இந்நூலில் கிடைக்கும். – ஆயிஷா இரா.நடராசன்
Reviews
There are no reviews yet.