நாரத ராமாயணத்தில் கிண்டலுக்கும் நகைச்சுவைக்கும் அப்பால் புதுமைப்பித்தனை வதைக்கும் துக்கத்தைக் காண முடியும். மதத்தால் பயன்படுத்திக்கொள்ளப்படும் மக்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. இதிகாசமும் கற்பனையும் இணைவது யதார்த்தத்தை முன்னிலைப்படுத்துவதற்காகத் தான். பெயர்களை வெறும் பாத்திரங்களாகக் கொள்ளாமல் caricature ஆகவும் குறியீடுகளாகவும் பார்த்தால் படைப்பின் பரிமாணங்கள் இடம், காலத்தை மீறி உண்மைகளைச் சொல்லும். அயோத்தியும் அயோத்தி அல்ல. 2021இல் நம்மையும் காண முடியும்.
~ என். சிவராமன் (முன்னுரையில்)
‘நாரத ராமாயண’த்தில் காந்தியை இளைய பரதன் என்று குறிப்பிட்டு, அவருடைய கதர் இயக்கம், கைராட்டை இயக்கம் பற்றியும் சிறையுள் இருக்கும்போதே திடீரென்று அரிசனங்களுக்கு எதிரான தீண்டாமை ஒழிப்பிற்காகக் காந்தியார் 8-5-1933-ல் தொடங்கிய இருபத்தொருநாள் உண்ணாவிரதத்தைச் சிறைக்குள் தொடராதபடி அவரை ஆங்கில அரசு விடுதலை செய்தது பற்றியும் படுகிண்டலாக எழுதியுள்ளார்.
~ ராஜ் கௌதமன்
Reviews
There are no reviews yet.