பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண் டின் தொடக்கத்திலும் நிலவிய சமூகக் கொடுமைகளால் ‘உள நோயாளர் விடுதி’ என்று அழைக்கப்பட்ட கேரளத்தில் மறுமலர்ச்சிக்கு வழியமைத்த முதன்மையான போராளிகளில் ஒருவர் அய்யன்காளி. தாம் பிறந்த புலையர் இனத்தைத் தீண்டாமையிலிருந்து விடுவிக்கப் போராடியதுடன் பேதமற்ற பொதுவான சமூக நீதிக்காகவும் அயராது சமர் புரிந்தவர். கல்வியினாலேயே பாரில் மேன்மைகள் எய்தலாகும் என்று உணர்ந்தவர்; உணர்த்தியவர். தீண்டத் தகாதவர்களுக்கு முதல் கல்விக் கூடத்தை உருவாக்கினார் .பொது வெளிகள் எல்லாருக்குமானவை என்று அறிவித்தவர்; அதைச் செயல்படுத்தியவர். ‘வில் வண்டிச் சமரம்’ மூலம் சாதிய ஒடுக்குமுறைக்கு அறைகூவல் விடுத்தார். இன்று அவர் நவீன கேரளத்தின் ‘மகாத்மா’.அய்யன்காளியின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றை விரிவான ஆய்வுக் குறிப்புகளுடனும் திருத்திச் சரிபார்க்கப்பட்ட தரவுகளுடனும் அரிய புகைப்படங்களுடனும் முன்வைக்கிறது இந்த நூல்.
மகாத்மா அய்யன்காளி: கேரளத்தின் முதல் தலித் போராளி
Brand :
- Edition: 01
- Published On: 2020
- ISBN: –
- Pages: –
- Format: Paperback
Category: வாழ்க்கை வரலாறு
Author:நிர்மால்யா
Be the first to review “மகாத்மா அய்யன்காளி: கேரளத்தின் முதல் தலித் போராளி” Cancel reply
Reviews
There are no reviews yet.