கடல் என்னும் பிரம்மாண்ட பிரகிருதியைக் கண்டு பயந்து, தரையிறங்க மறுக்கும் குழந்தையொருத்தியிடம், காலைச் சுற்றும் பூனைக்குட்டிகளாய் அலைகளை அனுப்பி சமாதானம் பேசுகிறது சமுத்திரம். தயங்கி அவள் பாதம் தரை தொட்ட பின்னால், பெருமகிழ்ச்சி ஒன்று அவளுயரம் தாண்டிப் பொங்கியெழுந்து அவளை முழுதாய் தழுவிப் போகிறது.
திகைத்து நின்றவள் சட்டென அமர்ந்து கடலையே பெரியதோர் விளையாட்டுப் பொருளாய் கையில் வைத்து விளையாடத் தொடங்குகிறாள். நேரம் கடந்து கொண்டேயிருக்கிறது. இருட்டத் தொடங்கி விட்டது. வீட்டிற்குப் போகலாமென அன்னை அழைக்கிறார். இன்னும் விளையாடித் தீராத புத்தம் புது பொம்மையாய் தன் முன்னால் கிடக்கும் கடலைப் பார்த்துவிட்டு குழந்தை சொல்கிறாள்..
Reviews
There are no reviews yet.