குமரிமாவட்ட மீனவச் சமூகத்தின் வரலாற்றைச் செறிவான நடையில் விவரிக்கும் வறீதையா, தொழில்ரீதியாகவும் சமூக வாழ்விலும் அது முந்திச் செயல்பட்ட கூறுகளை விளக்குவதோடு செய்யத் தவறிய அம்சங்களையும் தெளிவாக்குகிறார். தமிழ்ப் பொதுப் புத்தியில் படிந்துள்ள மீனவ வாழ்க்கை எதார்த்தத்தில் முற்றிலும் மாறுபட்டுள்ளதைப் பட்டவர்த்தனமாக்கும் இந்நூலில் தம் இனத்தின் துயரங்களைக் குறித்துப் பரதவப் பெண்கள் முதன்முதலாக வாய்திறக்கிறார்கள். மீனவ வாழ்வின் அவலங்களைத் துல்லியமான புள்ளிவிவரங்களோடு எடுத்துரைக்கும் வறீதையா, மீனவர்களின் மறுமலர்ச்சிக்குப் பல காரியார்த்தமான யோசனைகளை அரசியல் தளத்தில் அவர்கள் கைக்கொள்ள வேண்டிய நிலைப்பாடுகள் உள்ளாக முன்வைக்கிறார். முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் (1959, பள்ளம்துறை) தூத்தூர் செயின்ட் ஜூட்ஸ் கல்லூரியில் 1982 முதல் மீன்வளமும் விலங்கியலும் கற்பித்து 2018இல் பணிநிறைவு பெற்றவர். 1990களில் தொடங்கி கடல், மீன்வளம், கடல்சார் மக்கள் குறித்து ஆய்விலும் எழுத்திலும் தொடர்ந்து தீவிரமாய் இயங்கி வருகிறார். ‘கடலம்மா பேசுறங் கண்ணு’, ‘நெய்தல் சுவடுகள்’, ‘பழவேற்காடு முதல் நீரோடி வரை’, ‘மூதாய் மரம்’, ‘The Sea Tribes under Seige’ உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நூல்களையும் ஓர் ஆவணப் படத்தையும் படைத்துள்ளார். நெய்தல் வெளி, கடல்வெளி பதிப்பகங்களின் நிறுவன பதிப்பாளராக ஏராளம் படைப்பாளிகளைத் தமிழுக்கு அறிமுகப் படுத்தியுள்ளார். விகடன் இலக்கிய விருது(2015), அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு (2016), மம்மா ஆதா விருது (2016) முதலிய பல விருதுகள் பெற்றுள்ளார்.
என்னைத் தீண்டிய கடல்
Brand :
- Edition: 01
- Published On: 2009
- ISBN: 9788189359737
- Pages: 184
- Format: Paperback
Out stock
Out of stock
SKU: 9788189359737
Category: கட்டுரைகள்
Author:வறீதையா கான்ஸ்தந்தின்
Be the first to review “என்னைத் தீண்டிய கடல்” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.