10 வயதில், முதல் சிறுகதையை எழுதியவர் சூடாமணி. சிறுகதைகள், கவிதைகள், தமிழர் பெருமைகள் பற்றிய காணொளிகள், வண்ண வண்ண ஓவியங்கள் என தனது படைப்பாற்றலை பல தளங்களில் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். தேசிய ஓவிய விருது, பாரதி பைந்தமிழ் சுடர் விருது, வாஜுரா உலக சாதனை விருது என பல விருதுகளை பெற்றுள்ளார். மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மாணவியாக இல்லாமல், புதுமைப்பித்தனின் ‘காலனும் கிழவியும்’ கதையை ரசனையோடு சொல்லுவார்.
கடவுளோடு விவாதிக்கும் கந்தசாமி பிள்ளையாக மாறுவார். வண்ணதாசனின் “நிலை” கதையின் கோமுவாக மாறி, நம்மை அழ வைப்பார். வண்ணநிலவனின் “பிரயாணம்” கதையின் நமச்சிவாயம் பிள்ளை தாத்தாவாக ஆகி சிரிக்கவும் வைப்பார். சிறார் கதைகளை மட்டுமின்றி, தமிழ் இலக்கியத்தின் ஆகச்சிறந்த படைப்பாளிகளின் கதைகளை சொல்லும் மாணவியாகவும் திகழ்கிறார் சூடாமணி. இவரது முதல் படைப்பு ‘அம்மாவைத் தேடி’ – இரா.நாறும்பூநாதன்
Reviews
There are no reviews yet.