ஆகாயம் என்பது நம் அனைவருக்கும் பிரமிப்பூட்டும் ஒன்று. ஆதி மனிதனிலிருந்து இன்றைய நவநாகரீக மனிதர்கள் வரை ஆகாயத்தை உற்று நோக்காதவர்கள் இருக்க முடியாது. வான் பொருள்களாகிய சூரியன், கோள்கள், நட்சத்திரங்கள், சந்திரன் அனைத்தையும் அந்தகாலந்தொட்டே தொடர்ந்து கூர்ந்து நோக்கி வந்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.
அவர்கள் பூமிக்கும் வானத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும் நம்பி வந்தார்கள். உலக வரலாற்றில் ஆதிகாலந்தொட்டு வானவியல் அறிவு நன்றாக இருந்ததற்கான சான்றுகள் பழங்கால கல்வெட்டுகள், நூல்கள் என பல்வேறு வகைகளில் நமக்குத் தெரிய வருகின்றன. மக்களுக்கு அறிவியலை கொண்டு செல்லும் வகையில் வானவியல் சம்மந்தப்பட்ட நூல்கள் பல வெளிவந்திருக்கின்றன. அந்த நூல் வரிசையில் அகாயச் சுரங்கம் தடம் பதிக்கும் ஒன்று. இது படிப்போரின் கவனத்தை ஈர்க்கும்.
Reviews
There are no reviews yet.