சூழ்நிலைகளின் பரபரப்புகளில் ஆவேசங்கொள்ளாமல் கவிஞனாயிருத்தல் தனித்த சுபாவம். கவிஞனாயிருப்பதற்கும் கவிதையெழுதுகிறவனாயிருப்பதற்கும் இடைப்பட்ட வேறுபாடு இது. ஜி.எஸ்.தயாளன் ‘கவிஞனாயிருத்தல்’ வாய்க்கப் பெற்றவர். அதுவே அவரும், அவரைப் போலவே அவரது கவிதைகளும் பெற்றிருக்கும் அழகு. ஏராளமானவர்கள் எழுதும் கவிதைகளுக்கிடையில், எளிமையான இவரது கவிதைகள்; சலனமும் நிச்சலனமும் கொண்ட கவிஞனால் உருப்பெற்றவை. சலனமுறும் வாழ்வை நிச்சலனத்தால் வரைந்து பார்ப்பவை.இயலாமை, துக்கம், போராட்டம் இவற்றிற்கிடையில் வாழ்தலுக்கான நம்பிக்கையை வலுப்பவை.வாழ்தலை லெகுப்படுத்திக்கொள்ளப் பிரயத்தனப்படுபவை.லெகுப்படுத்திக்கொள்ள இயலாமற்போகிற பட்சத்திலும்கூட. . . வந்து செல்பவர்களுக்கு மத்தியில் தொடர்ந்து செயல்படும் ஜி.எஸ்.தயாளனை நிலைபேறு கொள்ளச்செய்யும் குணம் இதுதான். இந்த வேளிமலைப் பாணனுக்கு வாழ்தலே லட்சியம். கவிதை அதன் சாரம்.- லக்ஷ்மி மணிவண்ணன்
வேளிமலைப் பாணன்
Brand :
₹90
- Edition: 01
- Published On: 2014
- ISBN: 9789382033585
- Pages: 96
- Format: Paperback
SKU: 9789382033585
Category: கவிதைகள்
Author:ஜி. எஸ். தயாளன்
Be the first to review “வேளிமலைப் பாணன்” Cancel reply
₹90
Reviews
There are no reviews yet.