கடல் தமிழ்வாசகனுக்கு அந்நியமானது. கடலை எழுதியே தீரவேண்டும் என்னும் முனைப்புக் கொண்ட படைப்பாளிகள் இல்லாமையே இதற்குக் காரணம்.கடலின் தன்மை மீனவனிடம் படிந்து கிடக்கிறது. மீனின் உத்திகளை வென்று, அதை கொன்றெடுப்பதில் உள்ளது அவனது இருத்தல். எதிர்ப்படும் அனைத்தையும் மேற்கொண்டாக வேண்டும் என்ற இனம் புரியா நிர்பந்தம் அவன் தோள்களில் உட்கார்ந்திருப்பதான வாழ்க்கை என்கிறது வறீதையாவின் பதிவு.முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் (1959, பள்ளம்துறை) தூத்தூர் செயின்ட் ஜூட்ஸ் கல்லூரியில் 1982 முதல் மீன்வளமும் விலங்கியலும் கற்பித்து 2018இல் பணிநிறைவு பெற்றவர். 1990களில் தொடங்கி கடல், மீன்வளம், கடல்சார் மக்கள் குறித்து ஆய்விலும் எழுத்திலும் தொடர்ந்து தீவிரமாய் இயங்கி வருகிறார். ‘கடலம்மா பேசுறங் கண்ணு’, ‘நெய்தல் சுவடுகள்’, ‘பழவேற்காடு முதல் நீரோடி வரை’, ‘மூதாய் மரம்’, ‘The Sea Tribes under Seige’ உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நூல்களையும் ஓர் ஆவணப் படத்தையும் படைத்துள்ளார். நெய்தல் வெளி, கடல்வெளி பதிப்பகங்களின் நிறுவன பதிப்பாளராக ஏராளம் படைப்பாளிகளைத் தமிழுக்கு அறிமுகப் படுத்தியுள்ளார். விகடன் இலக்கிய விருது(2015), அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு (2016), மம்மா ஆதா விருது (2016) முதலிய பல விருதுகள் பெற்றுள்ளார்.
View cart “தொல்பசிக் காலத்து குற்ற விசாரணை அறைக்குள் மூடி முத்திரையிடப்பட்ட 8 தடயக் குறிப்புகள்” has been added to your cart.
வர்ளக் கெட்டு
Brand :
₹123
- Edition: 01
- Published On: 2014
- ISBN: 9789384646172
- Pages: 147
- Format: Paperback
SKU: 9789384646172
Category: சிறுகதைகள்
Author:வறீதையா கான்ஸ்தந்தின்
Be the first to review “வர்ளக் கெட்டு” Cancel reply
₹123
Reviews
There are no reviews yet.