மருத நிலத்திலும் நெய்தல் நிலத்திலுமாக சொல்லப்பட்ட கதைகள் இவை. எளியோர்களின் வாழ்க்கை நிலத்தோடும் கடலோடும் எப்படி பிணைக்கப்பட்டுள்ளது என்பதையும் கரடுமுரடானதாகவும் திண்டாட்டத்திடனும் கழிக்கின்ற அன்றாட வாழ்விலும் சமன் குலைக்கத் தயாராக இருக்கின்ற இயற்கைப் பேரிடரும் அதற்கு நிகரான மனப்போராட்டங்களையும் இணைத்துப் பின்னப்பட்டுள்ள கதைக்களங்கள். பறவைகளாலும் மீன்களாலும் சாராய நெடியாலும் களைத்துப் போகாத ஒரு விடை தெரியாத பயணத்தை இலக்கியமாக்கியிருக்கிறது.
நாளை மறு தினம் கடலுக்குள் போவதற்குள் படகு பராமரிப்பு பணிகளையும், வலைகளையும் சரி செய்ய வேண்டும். குறைந்தது மூன்று படகுகளையாவது கடலில் இறக்க வேண்டும். ஒரு படகுக்கு 7 ஆட்களாவது வேண்டும்” கார்மேகத்தின் மனம் திட்டமிடல்களில் குழம்பி நின்றன. அப்போது நான்காம் வளைவில் இருந்து மஞ்சுளா கொலுசொலிக்க திரும்பி வந்து கொண்டிருந்தாள். பார்வையை கூர்மைப்படுத்தி அவள் தான் என்பதை கார்மேகம் கணித்தான். அவள் அருகில் வரும் வரை மவுனமாக காத்திருந்தார்கள்.
Reviews
There are no reviews yet.