சம கால மலையாள இலக்கியத்தில் நவீனத்துவம் பெரும் வீச்சை நிகழ்த்திய எழுபதுகளில் அறிமுகமானவர் என்.எஸ்.மாதவன். நவீனத்துவத்தை அடியொற்றி இயங்கியவர். எனினும் அதன் பொதுப் போக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சிறுகதைகள் மூலம் தன்னை நிறுவிக்கொண்டவர்.மாதவனின் கதைகள் வெறும் புனைவுகளல்ல; வரலாற்று இடையீடுகள். அல்லது வரலாற்றை ஓர் எழுத்தாளனின் நோக்கில் பரிசீலனை செய்யும் எத்தனங்கள். புராணிகங்களிலும் பழைய சரித்திரத்திலும் நிகழ்கால வரலாற்றிலும் பங்கேற்கும் பாத்திரங்களை இன்றைய பின்புலத்தில் விசாரிப்பவை அல்லது சமகால உலகத்துடன் அந்தப் பாத்திரங்களை எதிர்கொள்ள வைப்பவை மாதவனின் கதைகள். சரியாகச் சொன்னால் வரலாறு இல்லாதவர்களும் வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டவர்களும் நடத்தும் சரித்திர விசாரணையே இந்தக் கதைகள்.தன்னுடைய சிறுதைகளில் தனக்குப் பிடித்தவையாக என்.எஸ். மாதவனே தேர்ந்தெடுத்த பன்னிரண்டு கதைகளின் தொகுப்பு இந்நூல்.மலையாள எழுத்தாளர். 1948-இல் எர்ணாகுளத்தில் பிறந்தார். மலையாளப் புனைகதை இலக்கியத்தைப் புதுப்பித்தவர்களில் முக்கியமானவர். இலக்கியப் போக்கை நவீனத்துவத்துக்கு மடை மாற்றியவர் என்ற பெருமை அவருக்கு உரியது. 1970-இல் மாத்ருபூமி பத்திரிகை கல்லூரி மாணவர்களுக்காக நடத்திய சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘சிசு’ மூலம் மலையாளத்தில் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர் என்ற இடத்தைப் பிடித்தார். கேரள மாநில சாகித்ய அகாதமி, ஓடக்குழல் விருதுகள் பெற்றவர். மூன்று முறை சிறந்த சிறுகதைக்கான கதா விருது பெற்றவர்.
பெருமரங்கள் விழும்போது
Brand :
- Edition: 01
- Published On: 2012
- ISBN: 9789381969601
- Pages: 168
- Format: Paperback
SKU: 9789381969601
Categories: சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள்
Author:என். எஸ். மாதவன்Translator: நிர்மால்யா
Be the first to review “பெருமரங்கள் விழும்போது” Cancel reply
Reviews
There are no reviews yet.