“தமிழில் ஏதேனும் ஒருவகை எழுத்து முற்றிலும் அரிதாக உள்ளது என்றால் காட்சன் எழுதியிருப்பது போன்ற இவ்வகை பயணக் கட்டுரைகள்தான். ஒருவகையில் இது ஓர் ஆன்மிகப் பயணம். அவர் இந்தியப் பெருநிலத்தின் வழியாக பெரும் வேட்கையுடன் சென்று கொண்டிருக்கிறார். ஒவ்வொரு கணமும் தன்னையும் நிலத்தையும் அனைத்தையும் கடந்த ஒன்றையும்
கண்டுகொண்டிருக்கிறார்.
இந்தியாவின் நாமறியாத ஒரு தளம் பற்றிய மிக விரிவான சித்தரிப்பு இந்தப் பயணக்கட்டுரைகளில் உள்ளது. மிகச்சிறந்த இலக்கியவாசகரான காட்சனின் மொழி தமிழின் முக்கியமான புனைவெழுத்தாளர்களுக்கு நிகராக எழுகிறது. தி.ஜானகிராமனின் ‘நடந்தாய் வாழி காவேரி’ சிட்டிசிவபாத சுந்தரத்தின் ‘கௌதமபுத்தரின் அடிச்சுவட்டில்’ போன்ற நூல்களுக்கு நிகரானது இந்நூல்.”
Reviews
There are no reviews yet.