நகரத்தின் உள்ளே நின்று எழுதும் விஜய் மகேந்திரனின் கதைகள் ~சு. வேணுகோபால்
அசோகமித்திரன் நல்லதும் கெட்டதும், இழந்ததும் வீழ்ந்ததுமான நகரத்து மனிதர்களின் இயல்புணர்ச்சிகளைச் சற்று விலகி நின்று மென்மையான குரலில் சொன்னார். விஜய் மகேந்திரனின் கதைகளும் நகரத்து மனிதர்களைப் பற்றியதுதான். என்றாலும் நகரத்தின் இண்டு இடுக்குகளில் வாழும் சற்று மூர்க்கமான மனிதர்களின் உலகத்தைக் காட்டுகின்றன.ஒருவகையில் கோபிகிருஷ்ணன் கதை உலகிற்கு அருகிலானது. முக்கியமாக நேற்றைய மனிதர்களையல்ல – இன்றைய மனிதர்களின் முரண்களை, மோதல்களை, ஏமாற்றுத்தனங்களை, ஏமாறுதல்களை புதுசாக சொல்கின்றன.
பார்த்த விதத்திலும்,சொன்ன விதத்திலும் கதைகள் வாசகனின் நன்மதிப்பை பெறுகின்றன.சொல்முறையில் உருவாகிவிடும் ‘பிறப்பு’ என்ற தகுதி இயல்பாகவே இவரிடம் கூடி வந்திருக்கிறது. எந்தக் கதையும் சிறுகதையாக இவரிடம் ஏமாற்றத்தை தரவில்லை.நம்பிக்கை தருகின்றன. சிறுகதைக்கான பார்வையும் தொனியும் கூட்டிவந்திருக்கின்றன.இத்தொகுப்பு சிறுகதை துறைக்கு வளம் சேர்க்கக்கூடிய நல்ல தொகுப்பு என்ற அளவில் முக்கியத்துவமுடையதாகிறது.
Reviews
There are no reviews yet.