2022 சென்னை புத்தகக்காட்சியின் பிளாக்பஸ்டர் ஆகியிருக்கிறது நீதிநாயகம் கே. சந்துரு எழுதிய ‘நானும் நீதிபதி ஆனேன்’ நூல். நான்கு கடைகளுக்கு ஒரு கடை என்கிற ரீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளில் இந்தப் புத்தகம் வாங்கிவைக்கப்பட்டிருக்கிறது. மக்கள் அலையலையாக வந்து நூலை வாங்குகிறார்கள். புத்தகக்காட்சிக்கு வரும் சந்துருவோடு, குடும்பத்தோடு நின்று படம் எடுத்துக்கொள்கிறார்கள். புத்தகத்தை வாங்கி அவருடைய கையெழுத்து வாங்கி, குழந்தைகளிடம் அவர் கையால் கொடுத்து ஆசி வழங்கி புத்தகத்தைக் கொடுக்கச் சொல்கிறார்கள்.
பல்லாயிரக்கணக்கான தலைப்புகள் குவிந்திருக்கும் நாட்டின் பெரிய புத்தகக்காட்சியில், எழுத்தாளர்கள், நட்சத்திரப் பிரபலங்கள் புத்தகங்களைத் தாண்டி ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் சுயசரிதை நூல் மக்களால் இப்படி வாங்கப்படுவதும், கொண்டாடப்படுவதும் தமிழ்நாட்டில் இதுவரை நடந்திராதது.
சமீபத்தில் வெளியான த.செ.ஞானவேலின் ‘ஜெய்பீம்’ திரைப்படம் ஒரு வழக்குரைஞராக சந்துரு எப்படியான போராளியாக வாழ்ந்திருக்கிறார் என்பதை மக்களிடம் வெகுவாக எடுத்துச்சென்றது இதற்கு முக்கியமான காரணம் என்றாலும், மக்களுக்காக வாழ்பவர்களை சமூகம் எவ்வளவு உயரிய இடத்தில் வைத்துப் பார்க்க முற்படுகிறது என்பதற்கும் உதாரணம் ஆகியிருக்கிறது இந்நிகழ்வு.
Reviews
There are no reviews yet.