சங்கத்திலிருந்து நவீனத்துவம்வரை கவிதைத்தமிழை நன்கறிந்தவர் ஜெயதேவன். ஆணிவேர்…உச்சிக்கிளை இரண்டினுமிடையில், கைக்கெட்டும் உயரத்தில் தன் கவிதைகளைக் கனியவிட்டிருப்பது அவரது தெளிந்த வாசிப்பின் பரீட்சார்த்தம் என்றே உணர்கிறேன்.
தாவரமும் நீர்மையுமாகப் பிணைந்திருக்கும் இந்தப் பசுமைக் காதல் கவிதைகளில் – காதலில் உடைந்த வளையற்துண்டுகள், காலத்தின் கலைடாஸ்கோப்பில், அவன் / அவள் நினைவுகளை முன்னும் பின்னும் சுழலவிடுகின்றன. கண்ணீரில் நனைத்து கனவுகளில் உலர்த்துகின்றன.
எங்கிருந்து தொடங்குவது உனக்கான எனது கடைசி முத்தத்தை என்று கேட்கிறார். தொடங்கலாம்; எங்கே முடியும் என்பதுதான் ஆகூழ் போகூழ் திருப்பம்.
இருவர் மெளனத்தில் எவரின் மெளனம் அதிகமோ அவர்களே காதலில் வென்றவர் என்கிறார். தொகுதியை வாசித்து முடிக்கிற தருணம்… கனத்த பனிமூட்டம்போல் மெளனம் நம்மை மூடிக்கொள்கிறது.
~ பழநிபாரதி
Reviews
There are no reviews yet.