சாருவின் இந்தப் பேட்டியில் பேசுகிறவற்றில் கவனிக்கத்தக்க ஒன்றாக நான் கருதுவது ‘அவர் நான் மக்களுக்காக எழுதவில்லை. மக்களுக்கு எதிராக எழுதுகிறேன்’ என்பது. மக்கள் திரளின் சடத்தன்மைக்கு எதிராக எழுதுவது. நாஞ்சில் நாடன் ‘சொரணை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கக் கூடும். இந்தச் சொரணையை உசுப்பும் வேலையை சாரு தொடர்ந்து செய்துவந்திருக்கிறார். அதன் ஒரு அதிகாரப் பூர்வமான ஆவணமாக குதிரையின் வாயிலிருந்தே அது கடந்து வந்த தூரத்தை அளக்கும் நல்லதொரு முயற்சியாக இந்த நீண்ட பேட்டி இருக்கிறது.
– போகன் சங்கர் முன்னுரையிலிருந்து..
அருஞ்சொல் இணைய இதழில் வெளிவந்த என் நேர்காணல் இப்போது நூல் வடிவில் வந்துள்ளது. இது கிட்டத்தட்ட என்னுடைய சுயசரிதை என்று சொல்லலாம். அருஞ்சொல் ஆசிரியர் சமஸ் அந்த அளவுக்கு இந்த நேர்காணலை ஒரு சுயசரிதம் அளவுக்கு எடுத்துக்கொண்டு வந்தார். அருஞ்சொல்லில் வந்த நேர்காணலை இந்த நூலில் வெகுவாக செப்பனிட்டிருக்கிறேன். முடிந்தால் வாங்கிப் படியுங்கள்.
Reviews
There are no reviews yet.