லா .ச. ராமாமிருதம்

லா .ச. ராமாமிருதம்

லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (அக்டோபர் 30, 1916 – அக்டோபர் 30, 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்திலிருந்தே எழுதி வந்தவர். இவர், தனது 92வது பிறந்த நாளில் இறந்தார்.

நன்றி: விக்கிப்பீடியா

  • 30 October 1916
  • Male
  • 4