பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி தாவரவியல் சார்ந்து தமிழில் எழுதி வருபவர்களில் முதன்மையானவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தாவரவியல் துறையின் தலைவராகச் செயல்பட்டு ஓய்வு பெற்றவர். ‘தமிழரும் தாவரமும்’, ‘அறிவியலின் வரலாறு’. அறிவியலில் பெண்கள் – ஒரு சமூக வரலாற்றுப் பார்வை’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர். பூமிக்கு உயிர் கொடுத்து வருபவை தாவரங்கள். தாவரங்கள் இன்றி எந்தவொரு உயிரும் அடுத்த நகர்வைச் செய்ய முடியாது. தமிழருக்கும் தாவரங்களுக்கும் இடையிலான பிணைப்பு தொன்மையானது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிவியல் ரீதியில் ஐந்திணை நிலப்பகுப்பை. முன்மொழிந்த அறிவுச் சமூகம் நம்முடையது. நமது பண்பாட்டின் ஆதி முதல் அந்தம்வரை தாவரங்கள் ஆற்றிய, ஆற்றிவரும் பங்கு குறித்த ஒரு பருந்துப் பார்வை இந்த “தமிழர் தாவரங்களும் பண்பாடும்”.
தமிழர் தாவரங்களும் பண்பாடும்
Brand :
- Edition: 1
- Year: 2014
- Page: 50
- Format: Paper Back
Out stock
Out of stock
Category: பிற புத்தகங்கள்
subject: NATURE
Author:கு. வி. கிருஷ்ணமூர்த்தி
Be the first to review “தமிழர் தாவரங்களும் பண்பாடும்” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.