கடல் நிகழ்த்திச் சென்ற சுனாமியைத் தொடர்ந்து நிலம் நிகழ்த்திய கருணை சுனாமி தான் தமிழகக் கடலோர மக்களுக்குப் பெருந்துயரத்தை இழைத்தது. மீனவர் வாழ்கையை சமவெளி மனிதர்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை. அரசுகளின் கொள்கைகளும் பெருந்திட்டங்களும் மீனவர்களின் பாரம்பரிய வாழிடங்களையும் வாழ்வாதாரத்தையும் குறிபார்க்கின்றன. சுனாமி மறுகட்டுமானதிற்கெனக் கொட்டப்பட்ட பல்லாயிரம் கோடிகளின் பெறுமதி என்ன?முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் (1959, பள்ளம்துறை) தூத்தூர் செயின்ட் ஜூட்ஸ் கல்லூரியில் 1982 முதல் மீன்வளமும் விலங்கியலும் கற்பித்து 2018இல் பணிநிறைவு பெற்றவர். 1990களில் தொடங்கி கடல், மீன்வளம், கடல்சார் மக்கள் குறித்து ஆய்விலும் எழுத்திலும் தொடர்ந்து தீவிரமாய் இயங்கி வருகிறார். ‘கடலம்மா பேசுறங் கண்ணு’, ‘நெய்தல் சுவடுகள்’, ‘பழவேற்காடு முதல் நீரோடி வரை’, ‘மூதாய் மரம்’, ‘The Sea Tribes under Seige’ உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நூல்களையும் ஓர் ஆவணப் படத்தையும் படைத்துள்ளார். நெய்தல் வெளி, கடல்வெளி பதிப்பகங்களின் நிறுவன பதிப்பாளராக ஏராளம் படைப்பாளிகளைத் தமிழுக்கு அறிமுகப் படுத்தியுள்ளார். விகடன் இலக்கிய விருது(2015), அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு (2016), மம்மா ஆதா விருது (2016) முதலிய பல விருதுகள் பெற்றுள்ளார்.
பழவேற்காடு முதல் நீரோடி வரை
Brand :
- Edition: 01
- Published On: 2014
- ISBN: 9789384646165
- Pages: 147
- Format: Paperback
SKU: 9789384646165
Category: கட்டுரைகள்
Author:வறீதையா கான்ஸ்தந்தின்
Be the first to review “பழவேற்காடு முதல் நீரோடி வரை” Cancel reply
Reviews
There are no reviews yet.