புறநானூறு உள்ளிட்ட தமிழிலக்கியங்கள், ‘மிளிர் மணிகள்’ எனக் குறிப்பிடும் ஆபரணக் கற்களை மையமாகக் கொண்டு இரா. முருகவேள் ‘மிளிர் கல்’ நாவலைத் தந்திருக்கிறார். இந்த மிளிர் கற்களைக் கொண்டு சிலப்பதிகாரக் காலத்துக்கும் நவீன காலத்துக்கும் இடையே பாலம் ஏற்படுத்தியிருக்கிறார் முருகவேள். மிளிர் கற்களுக்காகப் பன்னாட்டு நிறுவனங்கள் விரிக்கும் சதி வலைகளை அம்பலப்படுத்தும் பகுதிகள் நாவலின் பிற்பகுதியில் இடம்பெறுகின்றன. அந்த வணிக நிறுவனங்களின் கண்ணசைப்பில், களப்பணியாளர்கள் ‘வன்முறையில் ஈடுபட்டு பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பவர்கள்’ என காவல்துறையால் வேட்டையாடப்படுகிறார்கள். இந்தப் பின்னணியில் அரசியல் சார்ந்த, வெகுமக்கள் நலன் சார்ந்த அடிப்படையான கேள்விகளையும் நாவல் எழுப்புகிறது.வரலாற்று உணர்வையும் சமூக உணர்வையும் பின்னணியாகக் கொண்டு சமகாலப் பிரச்சினைகளின் வேர்களைத் தேடிப் பயணிக்கிறது ‘மிளிர் கல்! பங்கேற்று நடக்க ஆரம்பித்தால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாட்களுக்குப் போய்த் திரும்பி வந்துவிட முடிகிறது. பயணம் முடிந்துவிடுகிறதா? அந்தப் புள்ளியில்தான் நிஜமான, நாம் கட்டாயம் மேற்கொண்டே தீர வேண்டிய நெடும் பயணம் தொடங்குகிறது!
View cart “காதுகள்” has been added to your cart.
மிளிர் கல்
Brand :
- Edition: 01
- Published On: 2014
- ISBN: –
- Pages: 288
- Format: Paperback
Out stock
Out of stock
Category: புதினம்
Author:இரா. முருகவேள்
Be the first to review “மிளிர் கல்” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.