ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய நான்காவது மாநாடு கேரள மாநிலம் பாலக்காடு நகரில் 1956ஆம் ஆண்டு ஏப்ரல் 19 முதல் 29 வரை நடைபெற்றது. அதில் 407 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டின் தகுதிகாண் குழுவின் அறிக்கையின்படி, இந்தப் பிரதிநிதிகள் அனைவரும் சிறையில் கழித்த ஒட்டு மொத்த காலம் 1344 ஆண்டுகள் ஆகும். அதாவது சராசரியாக ஒவ்வொருவரும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்துள்ளனர்.
இந்தப் பிரதிநிதிகள் தலைமறைவாக இருந்து செயல்பட்ட மொத்த காலம் 1021 ஆண்டுகள் ஆகும். அதாவது சராசரியாக ஒவ்வொருவரும் இரண்டரை ஆண்டுகளுக்கும்
மேலாகத் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர். இத்தகைய வீரஞ்செறிந்த வீரர்களின் துடிப்பான செயல்பாடும், தன்னிகரி ல்லா தியாகங்களும் கொண்ட தே இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம்.
Reviews
There are no reviews yet.