2000 க்கு பிறகு தமிழ்கவிதைகளுக்குள் நிகழ்ந்த பெருவிளையாட்டுக்களுக்கு ஒரு விதத்தில் சி.மணி, ஞானக்கூத்தன் ஆகியோர் துவக்கப்புள்ளிகள். ஞானக்கூத்தனின் விளையாட்டு சி.மணியைக்காட்டிலும் வெளிப்படையானதும் எளிமையானதுமாகும். மரபின் காதும் நவீன மனமும் கொண்டவை என ஞானக்கூத்தன் கவிதைகளைச் சொல்லலாம்.இவரின் சில கவிதைகள் தனிப்பாடல் திரட்டின் கவிதைகளை நமக்கு நினைவூட்டுபவை. ஆனால் பல தனிப்பாடல்களுக்கு கவிதை அந்தஸ்து கிடையாது. அவை வெற்றுவிளையாட்டுகள். ஞானக்கூத்தன் கவிதைகளில் உள்ளது ”விளையாட்டு பாவனை”.
நன்றி: கவிஞர் இசை
Reviews
There are no reviews yet.