இந்நாவலில் பீத்தல்கர், ராம்பெல்லா, காடாபலி, ஜாகர்கட்டி என ஊர்களும் கிராமங்களும் இருக்கின்றன. அதில் ஊராகவோ, கிராமமாகவோ அங்கீகரிக்கவேபடாத ஜூடாபந்த் இருக்கிறது. “இது என் ஊர் – கிராமம், இங்கு வாழும் நாங்களும் மனிதர்கள்…” என்று உயிரைக் கொடுத்துப் போராடுகிற மாலியாக்கள் இருக்கிறார்கள். மாலியாக்களின் குரலை உலகிற்கு உரத்து சொல்கிற சோமன்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த நாவல் நமக்கு உணர்த்துகிறது. இது வடக்கின் கதை மட்டுமல்ல. நம்மை சுற்றி இருக்கிற மேற்குத் தொடர்ச்சி மலையிலும் வனங்களிலும் வாழ்கின்ற நம் மக்களின் கதையும் இதுதான். இதை உணர்ந்துதான் அஸ்வினி குமார் மிஸ்ராவின் அற்புதமான இந்த படைப்பை தமிழுக்கு தந்துள்ளார் க. மூர்த்தி. வெறும் மொழியாக்கமாக இல்லாமல் அதன் உயிர்ப்பை பாதுகாத்து வாசகர்களுக்கு வழங்குவதற்கான அவரது முயற்சியும் உழைப்பும் அற்புதம்.
View cart “கோபல்ல கிராமம்” has been added to your cart.
ஆரண்ய தாண்டவம்
Brand :
- Edition: 01
- Published On: December 2022
- ISBN: 9789392578182
- Pages: 448
- Format: Hard Cover
SKU: 9789392578182
Categories: புதினம், மொழிபெயர்ப்புகள்
Author:அஸ்வினி குமார் மிஸ்ராTranslator: க. மூர்த்தி
Be the first to review “ஆரண்ய தாண்டவம்” Cancel reply
Reviews
There are no reviews yet.