எல்லோரது கதைகளின் அடியிலும் சுயசரிதையின் மெல்லிய நீரோட்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. அது எழுத்தாளன் மட்டுமே அறிந்த நதி. இது எஸ்.ராமகிருஷ்ணனின் எட்டாவது சிறுகதைத் தொகுதி.
இந்த தொகுப்பில் உள்ள 27 கதைகளில், நான் மேலே சொன்ன கதைகள் ஒரு மாதிரிக்குதான். ஒவ்வொரு சிறுகதையின் கட்டுமான நுட்பங்களும் கூர்ந்து அவதானிக்கத் தக்கவை. உணர்ச்சிப்பெருக்குக்கு ஏற்றமாதிரி கட்டுமானம் மாறுபடுவதுதான் இதன் பெரிய வெற்றி.
சில கதைகள் அழவைத்தாலும் வாசிப்பு இன்பம் என ஒன்று இருக்கத்தானே செய்கிறது. jigsaw puzzle ல் ஒரு சில்லு இன்னொரு சில்லைப்போல இருப்பதில்லை. இந்த தொகுப்பில் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையாக அமைந்துள்ளது. சிறுகதை எழுதுவோருக்கு பாடப்புத்தகமாக வைக்கக்கூடிய அளவுக்கு கதைகள் கச்சிதமாக நிறைவடைந்திருக்கின்றன. நல்ல சிறுகதையின் இலக்கணம் அதை வாசித்து முடித்த பின்னர் நீங்கள் பார்க்கும் பார்வை விசாலமானதாக இருக்கவேண்டும் என்பவர்கள் உண்டு. புதுக் கண்கள் கிடைக்கும் என்பார்கள். உங்களுக்கு ஒரு புது உலகமே காத்திருக்கிறது. இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் எஸ்.ரா தனித்தனியாக அனுப்பிவைத்த மகிழ்ச்சி போய்ச்சேரும்.
நன்றி : www.sramakrishnan.com
Reviews
There are no reviews yet.