ஹால்டார் லேக்ஸ்நஸ்

ஹால்டார் லேக்ஸ்நஸ்

ஹால்டார் லேக்ஸ்நஸ் (1908 – 1998) ஐஸ்லாந்து நாட்டின் தலைநகர் ரேய்க்ஜாவிக்கிற்கு அண்மையில் இருக்கும் ஊரில் பிறந்தார். பதினேழு வயதில் அவருடைய முதல் நாவல் வெளியானது. ஐஸ்லாந்தின் தற்காலப் புனைவிலக்கியத்தின் ஈடிணையற்ற பிதாமகராகப் பார்க்கப்படும் இவர் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த நாவலாசிரியர்களுள் ஒருவர் என்றும் மதிக்கப்படுகிறார். அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் இவருடைய படைப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. 1955ஆம் ஆண்டில் இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் விருது வழங்கப்பட்டது.

  • Male
  • 1