பல்வேறு களங்களில் நிகழ்த்தப்பட்ட பதினோரு நாடகங்களின் தொகுப்பு. இவை காத்திரமான அரசியல் புரிதலுடன் சமரசங்கள் ஏதுமின்றி மக்கள் மத்தியில் நிகழ்த்துவதற்காக வடிவமைக்கப்பட்டவை. இதில் மூன்று நாடகங்கள் சிறார் நிகழ்த்துவதற்காக எழுதப்பட்டவை. ஆனாலும் பதினோரு நாடகங்களும் விவசாயம், குழந்தை உழைப்பு, பெண்ணியம், குடிபோதை, வர்க்க ஒற்றுமை, இடது சிந்தனை, சாதி – மத – இன அரசியல் போன்றவற்றை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டவை. இவற்றின் வீரியம் என்பது நிகழ்த்துபவர்களின் பயிற்சியையும் தீவிரத்தையும் நிகழ்த்து நுட்பத்தையும் பொறுத்தது. பொதுவாக கலைஞர்களின் நிகழ்த்து நுட்பம் அவர்களது உடல், குரல், மனம் என்ற கூறுகளின் அடிப்படையிலானது. தீவிரம் என்பதோ மனத்தையும் அரசியலையும் அடிப்படையாகக் கொண்டது.
Be the first to review “டைமரும் சமயனும்” Cancel reply
Reviews
There are no reviews yet.