மார்​கெரித் யூர்ஸ்னார்

மார்​கெரித் யூர்ஸ்னார்

மார்கெரித் யூர்ஸ்னார் புகழ்பெற்ற பிரெஞ்சு பெண் எழுத்தாளர். இவரது கீழை நாட்டுக் கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பை க்ரியா பதிப்பகம் 2006ல் வெளியிட்டுள்ளது.

ஒரியண்டல் என அழைக்கப்படும் கீழை நாட்டின் இலக்கியங்கள், தொன்மங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அதன் பாதிப்பிலிருந்தே இந்தச் சிறுகதைத் தொகுப்பை எழுதியிருக்கிறார், ஒவ்வொரு கதையும் ஒரு தேசத்தினைச் சார்ந்தது. இந்தியப் புராணத்திலிருந்து எடுத்துக் கையாண்ட காளி பற்றிய இவரது சிறுகதை சர்ச்சைக்கு உள்ளானது.

இந்தியாவிற்கு இருமுறை வந்திருக்கிறார். கவிஞர் அம்ரிதா ப்ரீதம் இவரது தோழி. மார்கெரித் யூர்ஸ்னார் தன்னுடைய முதல் கவிதைத் தொகுப்பை மகாகவி தாகூருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அக் கவிதைகளைப் படித்துப் பாராட்டிய தாகூர் 1921ல் சாந்தி நிகேதனில் வந்து தங்கியிருக்கும்படி அழைப்பு விடுத்திருக்கிறார். அப்போது மார்கெரித் யூர்ஸ்னாரின் வயது 18. தனியே நீண்ட பயணம் செய்ய இயலாது என நினைத்த அவர் இந்தியாவிற்கு வரவில்லை. ஒருவேளை வந்திருந்தால் என் வாழ்க்கையும் சிந்தனைகளும் மாறியிருக்கக்கூடும் என்று நினைவு கூறுகிறார் மார்கெரித் யூர்ஸ்னார்

கீழைநாட்டுக்கதைகளின் தொகுப்பு 1938ல் வெளியானது. வாழ்க்கையின் உண்மையான ஆழத்தைக் கீழைத்தேய நாடுகளே கற்றுத் தருவதாகக் கூறுகிறார் மார்கெரித்.

~ நன்றி:

  • 8 June 1903
  • Female
  • 1