தமிழில் புத்தகக் கலாச்சாரம்: க்ரியா ராமகிருஷ்ணன் நினைவுக் கட்டுரைகள்
“மொழிசார்ந்த பிரச்சினைகளை உணராதவர்களாகவே தமிழ்ப் பதிப்பாளர்கள் இருக்கிறார்கள். புத்த சத்தைப் பதிப்பிப்பது என்பது புத்தகத்தை அச்சடிப்பதே என்று பரவலாக இருக்கும் (தவறான) கருத்தை உறுதிப்படுத்துவது போலவே பதிப்பாளர்களும் செயல்படுகிறார்கள்’ என்பது ராமகிருஷ்ணனின் கருத்து, நவீன தமிழ் வாசகருக்கு அவரது ரசனையைக் கூர்மைப்படுத்தும் பாங்கிலான நூல்களைத் தனது நாற்பத்தாறு ஆண்டுகாலப் பதிப்பு முயற்சியில் வெளியிட்ட சாதனை அவருடையது. தமிழின் தலைசிறந்த எழுத்துகளைத் தமிழ் வாசகப் பரப்பிற்குள் அவர் கொணர்ந்திருக்கிறார். அக்காலத்தில் சீரிய எழுத் தாளர்கள், ஓவியர்கள், நாடகக் கலைஞர்கள், இசைப் பிரியர்கள், ஆய்வறிவாளர்கள் என்று அனைவரும் வந்து கூடும் சங்கமக்கூடமாக க்ரியா திகழ்ந்தது என்று கூற வேண்டும். ~மு.நித்தியானந்தன்
Reviews
There are no reviews yet.